அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்ற நிலையில், ஈரான் புரட்சிகரப் படைத் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் என்று அயத்துல்லா அலி காமெனி மீண்டும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அயத்துல்லா அலி காமெனி தனது ட்விட்டர் பக்கத்தில், “சுலைமானியின் மரணத்துக்குப் பழிவாங்குவது தவிர்க்க முடியாதது. சுலைமானியின் மரணத்துக்கு உத்தரவிட்ட மனிதரும் (ட்ரம்ப்) பழிவாங்கலை எதிர்கொள்ள வேண்டும். பழிவாங்கல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று பதிவிட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/395JAkj
via
No comments:
Post a Comment