நைஜீரியாவில் பள்ளி மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் வடமத்திய பகுதியில் துப்பாக்கிய ஏந்திய நபர்கள் பள்ளி மாணவர்களைக் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நைஜீரிய போலீஸார் தரப்பில், “ஞாயிறன்று வடமத்திய பகுதியில் அமைந்துள்ள சலிஹு தன்கோ என்ற இஸ்லாமியப் பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் வருகை புரிந்திருந்தனர். அப்போது கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் அங்கிருந்த மாணவர்களைக் கடத்திச் சென்றனர். எத்தனை மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டார்கள் என்ற எண்ணிக்கை இதுவரை கண்டறியப்படவில்லை. கடத்தல் தொடர்பாக தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34vwiL7
via

No comments:

Post a Comment