24 நாடுகள் கலந்து கொள்ளும் யூரோ கால்பந்து தொடர் இன்று தொடக்கம்: ரோம் நகரில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் இத்தாலி - துருக்கி மோதல்

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 24 அணிகள் கலந்து கொள்ளும் யூரோ கால்பந்து தொடரின் 16-வது பதிப்பு இன்று நள்ளிரவு தொடங்குகிறது. வரும் ஜூலை 11-ம் தேதி வரை இந்த கால்பந்து திருவிழா நடைபெறுகிறது.

யூரோ கால்பந்து தொடரின் வரலாற்றில் முதன்முறையாக இம்முறை ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த 11 நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிஇங்கிலாந்தின் லண்டனில் உள்ள வெம்பிலி மைதானத்தில் நடைபெறுகிறது. தொடரில் கலந்து கொண்டுள்ள 24 அணிகளும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஹங்கேரி, போர்ச்சுக்கல், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zmFU9g
via

No comments:

Post a Comment