நியூஸிலாந்து ஒரு முறை; இந்தியா 5 முறை: ஐசிசி தொடர்களில் உயரப் பறக்கும் இந்திய வெற்றிக் கொடி!

முதன்முறையாக நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய கிரிக்கெட் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பெரிய விஷயம் இல்லை. இந்தியாவைத் தாண்டி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளில் ஒன்றுதான் இறுதிப் போட்டிக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எல்லா எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கிவிட்டு, நியூஸிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் தொடர்களில் இந்தியாவும் நியூஸிலாந்தும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருப்பது இது இரண்டாவது முறை. அதற்கு முன்பு இந்தியாவும் நியூஸிலாந்தும் ஐசிசி தொடரின் இறுதிப் போட்டி ஒன்றில் மோதியுள்ளன. 8 அணிகள் பங்கேற்ற ஐசிசி நாக் அவுட் டிராபி (இப்போது ஐசிசி சாம்பியன் டிராபி) தொடர் 2000ஆம் ஆண்டில் கென்யத் தலைநகர் நைரோபியில் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iDFt4u
via

No comments:

Post a Comment