பிரேசிலில் வேகம் எடுக்கும் கரோனா: 5 லட்சத்தை நெருங்கும் பலி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 98,135 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 98,135 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,449 பேர் பலியாகினர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.7 கோடி ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 4,98,621 ஆகவும் உள்ளது. 1.6 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். பிரேசிலில் 27% பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vGxVjW
via

No comments:

Post a Comment