தென் ஆப்பிரிக்காவில் கரோனா மூன்றாம் அலை தொடங்கியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறை தரப்பில், “நாட்டில் கரோனா மூன்றாம் அலை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,100 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதை அதிகரித்துள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zk8tE9
via
No comments:
Post a Comment