நைஜீரியாவில் பள்ளி மாணவர்கள் மீண்டும் கடத்தல்

நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் ஐந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கடத்திச் சென்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “நைஜீரியாவின் கெப்பி மாகாணத்தில் நேற்று பள்ளி ஒன்றில் நுழைந்து ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் அங்கிருந்த ஐந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கடத்திச் சென்றனர். கடத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. கடத்தலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கும், போலீஸாருக்கும் நடத்தப்பட்ட மோதலில் போலீஸார் ஒருவர் பலியானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2TFAsOc
via

No comments:

Post a Comment