கட்டுப்பாடுகளுக்குத் தயாராகும் இந்தோனேசியா

இந்தோனேசியாவில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி உள்ளதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து இந்தோனேசிய சுகாதாரத் துறை தரப்பில், “இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களாகவே கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே கரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன. அலுவலகங்களில் பணியாளர்களைக் குறைத்தல், மத வழிபாடுகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. தடுப்பூசி செலுத்தப்படுவது தீவிரப்படுத்தப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iUyJiJ
via

No comments:

Post a Comment