யூரோ கால்பந்து தொடர்: ஸ்பெயின் - போலந்து இடையிலான ஆட்டம் டிரா

யூரோ கால்பந்து தொடரில் போலந்துக்கு எதிரான ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றத் தவறிய ஸ்பெயின் அணி போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடித்தது.

யூரோ கால்பந்து தொடரில் ஸ்பெயினின் செவில்லே நகரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ‘இ’ பிரிவில் உள்ள ஸ்பெயின் - போலந்து அணிகள் மோதின. 25-வதுநிமிடத்தில் ஸ்பெயின் அணிமுதல் கோலை அடித்தது. பாக்ஸ் பகுதியின் ஓரத்தில்இருந்து ஜெரார்ட் மோரேனோஅடித்த பந்தை கோல்கம்பத்துக்கு மிக நெருக்கமாக நின்றஅல்வாரோ மொராட்டா கோலாக மாற்றினார். ஆனால் இது முதலில் ஆஃப்சைடு கோல் என அறிவிக்கப்பட்டது. பின்னர் ஸ்பெயின் அணி மேல்முறையீடு செய்ய கோல் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலந்து அணி இரு முறை கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qhN7TF
via

No comments:

Post a Comment