இலங்கையின் 9-வது அதிபராக அநுர குமார திசாநாயக்க பதவியேற்றார்: நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல உறுதி!

கொழும்பு: இலங்கையின் 9-வது அதிபராக அநுர குமார திசாநாயக்க பதவியேற்றுக் கொண்டார். ‘‘சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்களின் ஒற்றுமையே புதிய தொடக்கத்தின் அடித்தளம். நாம் ஒன்றிணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம்’’ என்று தெரிவித்தார்.

இலங்கை அதிபர் தேர்தல் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இலங்கை அதிபர் தேர்தல் விருப்ப வாக்கு அடிப்படையில் நடைபெறுகிறது. இதன்படி, வேட்பாளர் பட்டியலில் இருந்து 3 பேரை வாக்காளர்கள் தேர்வு செய்யலாம். ஒவ்வொரு வாக்காளரும் 1, 2, 3 என முன்னுரிமை அளித்து 3 வேட்பாளர் களுக்கு வாக்களிப்பார்கள். இதில் வாக்காளர் குறிப்பிடும் முதல் வேட்பாளர் முன்னுரிமை பெற்றவர் ஆவார். 50 சதவீதத்துக்கு மேல் 1-ம் எண் வாக்குகள் (முதல் முன்னுரிமை) பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tWEVePU
via

No comments:

Post a Comment