டொனால்டு ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் நேரில் காரசார விவாதம்: சர்வதேச பிரச்சினைகளில் பரஸ்பரம் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது. தற்போது ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபராக உள்ள ஜோ பைடன் வயது மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தேர்தலில் இருந்து விலகிக் கொண்டார். இதையடுத்து, ஜனநாயக் கட்சி சார்பில் துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சிசார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், இரண்டு வேட்பாளர்களும் நேரடியாக சந்தித்து விவாதம்நடத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில்நடந்த இந்த விவாத நிகழ்ச்சியை ‘ஏபிசி’ செய்தி நிறுவனம் நடத்தியது.இந்நிகழ்ச்சி பல்வேறு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பானது. நிகழ்ச்சி மேடைக்கு வந்த கமலாஹாரிஸ், டொனால்டு ட்ரம்ப்புடன் கைக்குலுக்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு அதிபர் வேட்பாளர்கள் இருவரும் நேரில் சந்தித்து கைக்குலுக்கியது இதுவே முதல் முறை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/czqjsoN
via

No comments:

Post a Comment