இலங்கையின் முதல் இடதுசாரி அதிபர்... யார் இந்த அநுர குமார திசாநாயக்க?

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற ஒன்பதாவது அதிபர் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க 57,40,179 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, இலங்கையின் முதல் இடதுசாரி அதிபர் என்ற சிறப்புடன் அவர் பதவியேற்கவுள்ளார்.

உலகில் பெரும்பான்மையான நாடுகள் பிரதமர் ஆட்சி முறையைக் கொண்டிருந்தாலும், இலங்கையில் அதிபர் ஆட்சி முறையே பின்பற்றப்பட்டு வருகின்றது. இலங்கை மக்களினால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தல் வேண்டும். ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்க முடியும். மூன்றாவது முறையாக இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி பதவி வகிக்க முடியாது. மேலும், அதிபர் அரசின் தலைவராகவும், முப்படைகளின் தலைவராகவும், நிறைவேற்று அதிகாரங்கள் கொண்டவராகவும் பதவி வகிப்பார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/airweby
via

No comments:

Post a Comment