‘‘தேர்தல் முடிவுகளால் பாஜக மீதிருந்த அச்சம் துடைத்தெறியப்பட்டுவிட்டது’’: ராகுல் @ அமெரிக்கா

டல்லாஸ் (அமெரிக்கா): நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காரணமாக பாஜக மீது, நரேந்திர மோடி இருந்த அச்சம் துடைத்தெறியப்பட்டுவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, டல்லாஸ் நகரில் இந்தியர்கள் மத்தியில் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: இந்திய அரசியலில் அன்பு, மரியாதை, பணிவு ஆகிய மதிப்புகளை புகுத்துவது எதிர்க்கட்சித் தலைவராக எனது பங்கு என நான் நம்புகிறேன். அன்பு, மரியாதை மற்றும் பணிவு ஆகியவை எந்த கட்சியிலும் இல்லை என்று நான் நினைக்கிறேன். இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து நான் என்னை வெற்றிபெற்ற ஒருவராக பார்ப்பேனா என்று கேட்டால், அன்பு என்ற கருத்தை இந்திய அரசியலில் முன்னணியில் கொண்டு வர நான் உதவியிருக்கிறேனா? நான் உட்பட அரசியல்வாதிகளை இன்னும் பணிவு கொண்டவர்களாக ஆக்கிவிட்டேனா? இந்திய மக்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் மரியாதையை நான் அதிகரித்திருக்கிறேனா? என்ற மூன்று விஷயங்களால் நான் அதனை அளவிடுவேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YdWQPEg
via

No comments:

Post a Comment