மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை: நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா இறுதிப் போட்டியில் இன்று மோதல்

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் லீக் சுற்றின் முடிவில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென்ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய 4 அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இதில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணிவீழ்த்தி இறுதி சுற்றில் நுழைந்தது. அதேவேளையில் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தியது. சாம்பியன் கோப்பையாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டிஇன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. இதில் நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/U5NuxbP
via

No comments:

Post a Comment