அமெரிக்காவில் 2 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் கரோனாவால் பாதிப்பு

அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் முதல் சுமார் 2,80,000 குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நோய்த் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் கூறும்போது, “அமெரிக்காவில் கரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து மார்ச் மாதம் முதல் சுமார் 2,80,000 குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மருத்துவமனைகளில் குழந்தைகள் இறப்பு மற்றும் சேர்க்கை சதவீதம் குறைந்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3if5CCF
via

No comments:

Post a Comment