சுரேஷ் ரெய்னா புதிய திட்டம்: ஜம்மு காஷ்மீர் ஆளுநருடன் திடீர் சந்திப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிரிக்கெட் பயிற்சி அகாடமியைத் தொடங்க உள்ளார். மாநிலத்தின் பின்தங்கிய பகுதிகளில் இருந்து இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் பயிற்சி அகாடமி தொடங்கப்படுகிறது என்று மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த மாதம் 15-ம் தேதி ஓய்வுபெற்ற சுரேஷ் ரெய்னா, தனிப்பட்ட காரணங்களால், ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகினார். இந்நிலையில், காஷ்மீர் நகருக்கு நேற்று சுரேஷ் ரெய்னா சென்று, மாநிலத் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, காவல் டிஜிபி தில்பாக் சிங் ஆகியோரைச் சந்தித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32Jf6kW
via

No comments:

Post a Comment