எங்களைத் தற்காத்துக்கொள்ள சீனாவின் மீது தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமை உள்ளது: தைவான்

சீனாவின் அத்துமீறல்களுக்கு எதிராக எங்களைத் தற்காத்துக் கொள்ள எங்கள் ராணுவத்தினருக்கு முழு உரிமை உள்ளது என்று தைவான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தைவான் ராணுவம் தரப்பில், “கடந்த வாரம் தைவான் ஜலசந்தியில் சீனாவின் ஜெட் விமானங்கள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தின. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே எதிரிப் படைகள் எல்லைப் பகுதியில் தொடர்ந்து அத்துமீறலை நிகழ்த்துகின்றன. எல்லைப் பகுதியில் எதிரிகளின் அத்துமீறல்களுக்கு எதிராக எங்களைத் தற்காத்துக் கொள்ள எங்களுக்கு முழு உரிமை உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2FTRP71
via

No comments:

Post a Comment