அடுத்த வருடம் பிப்ரவரி மாத இறுதிக்குள் அமெரிக்காவில் 10 கோடி பேருக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “நாட்டில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் கரோனா தடுப்பு சுமார் 10 கோடி பேருக்குச் செலுத்தப்படும். முதலில் முதியவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். டிசம்பர் மாதத்தில் 2 கோடி பேருக்கும் ஜனவரியில் 3 கோடி பேருக்கும், பிப்ரவரி இறுதிக்குள் 5 கோடி பேருக்கும் கரோனா தடுப்பு மருந்து வழங்கத் திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2VBSgax
via
No comments:
Post a Comment