ஆஸி.யுடன் இன்று மீண்டும் மோதல்- டி20 தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று மதியம் நடைபெறுகிறது.

கான்பெராவில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்திருந்தது. இதனால் இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது ஆட்டம் இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டிருந்தது. பேட்டிங்கில் கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தினர். அதிலும் ஜடேஜா கடைசி 2 ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன் குவித்ததன் காரணமாகவே வலுவான இலக்கை கொடுக்க முடிந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2LcJTR2
via

No comments:

Post a Comment