3-வது ஒருநாள் போட்டி: 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஆறுதல் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கெனவே தோற்று தொடரை இழந்துவிட்ட நிலையில், இது ஆறுதல் வெற்றியாக அமைந்துள்ளது.

303 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே சிக்ஸர் அடித்து அதிரடி காட்டினர். 6-வது ஓவரில் நடராஜன், லபூஷக்னேவை வெளியேற்றினார். இதன் பிறகு ஸ்மித் களமிறங்கினாலும் பெரும்பாலான பந்துகளை கேப்டன் ஆரோன் பின்ச்சே எதிர்கொள்ளும்படி ஆனது. 11-வது ஓவரில் 7 ரன்களுக்கு ஸ்மித் ஆட்டமிழந்தார். ஷர்துல் தாக்கூரின் இந்த விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mv1scV
via

No comments:

Post a Comment