சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கி அறுவடை செய்த நாசா

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையமானது பூமியில் இருந்து 408 கிலோ மீட்டருக்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இந்த விண்வெளி ஆய்வு நிலையத்தை நிறுவியுள்ளன. இந்த நிலையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வில் ஈடுபடுவது வழக்கம்.

அவ்வாறு அங்கு தங்கியுள்ள விண்வெளி வீரர்களுக்கு, பூமியில் கிடைப்பது போன்ற உணவுகள் கிடைக்காது. இதனால் அவர்கள், வைட்டமின் சத்துகள் அடங்கிய மாத்திரைகளையே உணவாக உட்கொள்வார்கள். அவர்களுக்கு சத்தான உணவு வழங்க புவி ஈர்ப்பு விசை சிறிதும் இல்லாத விண்வெளி நிலையத்தில் காய்கறிச் செடிகளை வளர்க்கும் ஆராய்ச்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இதற்காக, குளிர்சாதனப் பெட்டி போன்ற ஒரு இயந்திரத்தை உருவாக்கி, அதில் செடிகள் வளர தேவையான ஆக்சிஜன் வாயு, செயற்கை சூரிய ஒளியை உமிழும் கருவி ஆகியவை இணைக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gctO9q
via

No comments:

Post a Comment