நிலவில் இருந்து கல், மண் சேகரித்த சீன விண்கலம்: தேசிய கொடியை நட்ட பிறகு வெற்றிகரமாக பூமிக்கு புறப்பட்டது

நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு, சீன விண்கலம் பூமிக்குத் திரும்பும் பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியது.

நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கி, அங்குள்ள மாதிரிகளை அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் பூமிக்குக் கொண்டு வந்துள்ளன. அவற்றை வைத்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வரிசையில் போட்டிப் போட்டுக் கொண்டு சீனாவும் நிலவின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளது. அதன்படி, சீனாவின் விண்கலம் கடந்த நவம்பர் 24-ம் தேதி செவ்வாய்க்கிழமை நிலவுக்கு அனுப்பப்பட்டது. ஒரு வார பயணத்துக்குப் பின்னர் அதில் இருந்த லேண்டர் இயந்திரம், கடந்த செவ்வாய்க்கிழமை நிலவில் பத்திரமாகத் தரையிறங்கியது. அங்கு கல், மண் போன்ற மாதிரிகளை வெற்றிகரமாக சேகரித்துக் கொண்டு கடந்த வியாழக்கிழமை பூமிக்குத் திரும்ப விண்கலம் புறப்பட்டுவிட்டது. இதன் மூலம் நிலவில் நாங்கள் சாதனை படைத்துள்ளோம் என்று சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவின் தரையில் இருந்து விண்கலம் புறப்படும் வீடியோ காட்சிகளை சீன சிசிடிவி தொலைக்காட்சி ஒளிபரப்பியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Igv8vi
via

No comments:

Post a Comment