கறுப்பினத்தவர்களுக்கு வீட்டில் இடம் தந்து காப்பாற்றியதால் பிரபல ‘டைம்’ இதழ் ஹீரோக்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியினருக்கு கவுரவம்

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் (46) என்ற கறுப்பினத்தை சேர்ந்தவரை, கடந்த மே மாதம் 25-ம் தேதி போலீஸார் சந்தேகத்தின் பேரில் பிடித்தனர். டெர்ரக் சவுவின் என்ற போலீஸ்காரர், அவரை கீழே தள்ளி கழுத்தில் கால் வைத்து அழுத்திய போது மூச்சுத்திணறி பிளாய்ட் இறந்தார். இந்த வீடியோ உலகம் முழுவதும் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன்பின், அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் உட்பட பல பகுதிகளில் பிளாய்ட் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடைபெற்றன. இரவு பகலாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. கடந்த ஜூன் 1-ம் தேதி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே நடைபெற்ற போராட்டத்தின் போது, அதில் பங்கேற்ற 70-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகுல் துபே என்பவர் தனது வீட்டில் தங்க இடம் கொடுத்து உதவிகள் செய்தார். இவர் சுகாதாரத் துறையில் பணியாற்றுகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3a9yJXP
via

No comments:

Post a Comment