ஆப்கானிஸ்தானில் இரண்டு பெண் நீதிபதிகள் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பெண் நீதிபதிகள் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “ தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உச்ச நீதிமன்றத்தின் பெண் நீதிபதிகள் இருவர் பலியாகினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் அவர்களது ஓட்டுநர்களும் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2KnL93B
via

No comments:

Post a Comment