வன்முறையைத் தூண்டும் கருத்துகளை பரப்பியதால் அதிபர் ட்ரம்ப் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்க நடவடிக்கை எடுத்த இந்திய வம்சாவளி பெண்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின்ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கும் நடவடிக்கைஎடுக்கப்பட்டிருப்பது இதுவேமுதல் முறை. இந்த நடவடிக்கையின் பின்னணியில் இந்திய வம்சா வளியைச் சேர்ந்த 45 வயதான பெண் வழக்கறிஞர் விஜயா காட்டே இருந்துள்ளார்.

சமூக வலைதளமான ட்விட்டரில், அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட கருத்துகள்தான் அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட தூண்டியது என்பதால் அவரது கணக்கு முடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் சட்டம் மற்றும் கொள்கைவகுக்கும் பிரிவின் தலைவராக உள்ள விஜயா காட்டே வெளியிட்ட அறிக்கையில், ‘‘வன்முறை அதிகரித்து விடக் கூடாது என்பதற்காக ட்ரம்ப்பின் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2KajtPM
via

No comments:

Post a Comment