இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்

இந்திய அணியுடன் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அடைந்த தோல்வியை விட மோசமானது என்று ஆஸ்திரேலிய அணியை அதன் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆஸி. பயணத்துக்கு வந்த இந்திய அணி, டெஸ்ட் தொடர் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து காயத்தால் பல முக்கிய வீரர்களை இழந்துள்ளது. கேப்டன் கோலி குழந்தைப் பிறப்பு காரணமாக விடுப்பில் சென்றார். முகமது ஷமி, உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், பும்ரா, ஜடேஜா, ஹனுமா விஹாரி எனத் தொடர்ச்சியாக வீரர்கள் சென்றுவிட்டார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qz9FOy
via

No comments:

Post a Comment