இந்தோனேஷிய பயணத்தின்போது போப் பிரான்சிஸ் மீது தாக்குதல் நடத்த சதி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 7 பேர் கைது

ஜகார்த்தா: இந்தோனேஷிய பயணத்தின் போது போப் பிரான்சிஸ் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 7 பேர் கைது செய்யப்பட்டதாக இந்தோனேஷிய போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஆசிய-பசிபிக் நாடுகளுக்கு போப் பிரான்சிஸ் 12 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை அவர் இந்தோனேஷியாவில் பயணம் செய்தார். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 7 பேர் திட்டமிட்டுள்ளதாக இந்தோனேஷிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் அவர்களை இந்தோனேஷிய போலீஸார் கைது செய்தனர். இந்தோனேஷியாவின் போகர், பெகாஸி, மேற்கு சுமத்ரா மற்றும் பங்கா பெலிடங் தீவு ஆகிய பகுதிகளில் இந்த கைது சம்பவங்கள் நடந்தன. ஒரு தீவிரவாதி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வில்கள் மற்றும் அம்புகள், டிரோன், ஐஎஸ்ஐஎஸ் பிரச்சார அறிக்கைகள் ஆகியவை இருந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/s8IwWiG
via

No comments:

Post a Comment