துலீப் டிராபி: சர்பராஸ் கான், ரிஷப் பந்த் ஆக்ரோஷத் தாண்டவம்!

பெங்களூருவில் நடைபெற்று வரும் ‘இந்தியா ஏ - இந்தியா பி’ அணிகளின் துலீப் கோப்பைப் போட்டியின் 3ம் நாளான நேற்று மதியம் குறைந்த ரசிகர்களைக் குஷிப்படுத்தி சர்பராஸ் கான், ரிஷப் பந்த் ஆடிய ஆக்ரோஷ அதிரடி ஆட்டம் டெஸ்ட் அணியில் இடம் பெறுவதற்கான போட்டி இந்திய அணியில் எத்தகையது என்பதைப் பறைசாற்றுவதாக அமைந்தது.

முதல் இன்னிங்சில் சர்பராஸ் கான் சகோதரர் முஷீர் கான் இந்தியா பி அணியை தன் அசாத்திய 181 ரன்களால் தூக்கி நிறுத்தி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 89 ரன்கள் என்ற நிலையிலிருந்து தன் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை 321 ரன்களுக்குக் கொண்டு சென்றார் என்றால், இந்தியா ஏ அணிக்காக இந்திய டெஸ்ட் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ்தீப் அற்புதமானப் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கலீல் அகமதுவும் அபாரமாக வீசி 2 விக்கெட்டுகளிக் கைப்பற்ற ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GsaKRnj
via

No comments:

Post a Comment