லாவோஸ் அதிபருக்கு தமிழகத்தில் வடித்த பித்தளை புத்தர் சிலை பரிசளிப்பு: ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வழங்கினார்

வியன்டியேன்: லாவோஸ் நாட்டில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அங்கு சந்தித்த அயல்நாட்டுத் தலைவர்களுக்கு இந்திய பாரம்பரிய பெருமையைப் பறைசாற்றும் பொருட்களைப் பரிசளித்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியான்’ அமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா, வியட்நாம், லாவோஸ், கம்போடியா, புருனே ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அதுபோல், கிழக்குஆசியா அமைப்பில் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான்உட்பட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த 2 அமைப்புகளின் உச்சி மாநாடுகள் லாவோஸ் நாட்டின் தலைமையில் அந்நாட்டின் தலைநகர் வியன்டியேனில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி லாவோஸ், தாய்லாந்து, நியூசிலாந்து, ஜப்பான்ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய நாட்டின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கைவினை பொருட்களை பரிசளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/p56xC2g
via

No comments:

Post a Comment