ஐபிஎல் போட்டி இப்போதுதான் சூடுபிடிக்கிறது. அன்று 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றிகரமாக விரட்டி வரலாறு படைத்தது, நேற்று துபாயில் ஆர்சிபி அணியின் 201 ரன்கள் இலக்கை விரட்டி மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டை செய்தது.
கிரன் பொலார்ட் 24 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். இதில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் அடங்கும், இஷான் கிஷன் 58 பந்துகளில் 2 பவுண்டரிகள் 9 சிக்சர்கள் உடன் 99 ரன்கள் எடுத்து துரதிர்ஷ்டவசமாக சதம் எடுக்காமல் அவுட் ஆனார். ஆடம் ஸாம்ப்பா, சாஹல் ஆகியோரது 2 ஓவர்களில் 49 ரன்கள் விளாசப்பட்டது. இஷான் கிஷன் 99-ல் அவுட் ஆக கடைசி பந்தில் 5 ரன்கள் மும்பை வெற்றிக்குத் தேவை, அப்போது பொலார்ட் ஷாட் நான்குக்குச் சென்றது இதனையடுத்து ஆட்டம் டை ஆனது. கடைசி 4 ஓவர்களில் ஆர்சிபி 79 ரன்களை விட்டுக் கொடுத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3j7CvCx
via
No comments:
Post a Comment