கடைசி 5 ஓவர்களில் மும்பை 89 ரன்கள் விளாசியதால் ‘டை’ ஆன ஆட்டம்: பரபரப்பான சூப்பர் ஓவரில் கோலி தலைமை ஆர்சிபி வெற்றி

ஐபிஎல் போட்டி இப்போதுதான் சூடுபிடிக்கிறது. அன்று 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றிகரமாக விரட்டி வரலாறு படைத்தது, நேற்று துபாயில் ஆர்சிபி அணியின் 201 ரன்கள் இலக்கை விரட்டி மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டை செய்தது.

கிரன் பொலார்ட் 24 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். இதில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் அடங்கும், இஷான் கிஷன் 58 பந்துகளில் 2 பவுண்டரிகள் 9 சிக்சர்கள் உடன் 99 ரன்கள் எடுத்து துரதிர்ஷ்டவசமாக சதம் எடுக்காமல் அவுட் ஆனார். ஆடம் ஸாம்ப்பா, சாஹல் ஆகியோரது 2 ஓவர்களில் 49 ரன்கள் விளாசப்பட்டது. இஷான் கிஷன் 99-ல் அவுட் ஆக கடைசி பந்தில் 5 ரன்கள் மும்பை வெற்றிக்குத் தேவை, அப்போது பொலார்ட் ஷாட் நான்குக்குச் சென்றது இதனையடுத்து ஆட்டம் டை ஆனது. கடைசி 4 ஓவர்களில் ஆர்சிபி 79 ரன்களை விட்டுக் கொடுத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3j7CvCx
via

No comments:

Post a Comment