நவாஸ் ஷெரீப்புக்கு கைது வாரண்ட் பிறப்பித்த பாக். அரசு

ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பாகிஸ்தான் அரசு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

70 வயதான நவாஸ் ஷெரீப் லண்டனில் உள்ள மருத்துவமனையில் கடந்த நவம்பர் மாதம் முதல் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரது ஜாமீன் முடிந்து அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதைத் தொடர்ந்து, அவரைத் தேடப்படும் குற்றவாளியாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இந்த நிலையில் நவாஷ் ஷெரீப்புக்கு பாகிஸ்தான் அரசு, கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3c8rX3g
via

No comments:

Post a Comment