மெல்போர்னில் கட்டுக்குள் வந்தது கரோனா

ஆஸ்திரேலியாவில் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மெல்போர்னில் ஊரடங்கு நீடித்து வந்தது. இந்த நிலையில் தற்போது கரோனா தொற்று குறைந்து வருகிறது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெல்போர்னில் 16 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது” என்று மெல்போர்ன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/334nRXc
via

No comments:

Post a Comment