ஐ. நா.வின் ஊழியர்களுக்குக் கரோனா தடுப்பூசிகளை அளிக்கத் தயார்: புதின்

உலகெங்கிலும் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தன்னார்வலர்களுக்குத் தங்களது கரோனா தடுப்பு மருந்தை வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பொது நிகழ்வு ஒன்றில் ரஷ்யா அதிபர் புதின் பேசும்போது, “நம்மில் எவரும் இந்த ஆபத்தான வைரஸை எதிர்கொள்ள முடியும். இந்த வைரஸ் ஐக்கிய நாடுகள் சபை, அதன் தலைமையகம் மற்றும் பிராந்திய நிறுவனங்களின் ஊழியர்களை விட்டு வைக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியர்களுக்கு நாங்கள் கண்டறிந்த கரோனா தடுப்பு மருந்தைத் தரத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32THr8d
via

No comments:

Post a Comment